இந்தியாவை வீழத்திய சந்தோஷத்தை தாங்க முடியாமல் மைதானத்தில் கண்ணீர் விட்டு கலங்கிய பாகிஸ்தான் கேப்டனின் தந்தை!
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்திய சந்தோஷத்தை தாங்க முடியாமல் பாபர் அசாமின் தந்தை உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
நேற்று துபாயில் நடந்த உலகக் கோப்பை ‘சூப்பர் 12’ போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாபசர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் வரலாற்று சாதனை படைத்தது.
இதற்கு முன் வரை உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் 12 போட்டிகளில் மோதியுள்ளன.
இந்த 12 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றிப்பெற்றுள்ளது. நேற்று நடந்த 13வது போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வரலாற்று படைத்தது.
இந்த வரலாற்று வெற்றியை பாகிஸ்தான் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டடி வருகின்றனர். அதேசமயம், பல கேப்டன்களால் முடியாததை சாதித்த பாபர் அசாமை பலரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உட்பட பலர் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்திய பிறகு மைதானத்தில் இருந்த பாபர் அசாமின் தந்தை இந்த சந்தோஷத்தை தாங்க முடியாமல் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு கலங்கினார்.
அவரை சுற்றி நின்று பல பாகிஸ்தான் ரசிகர்கள் பாராட்ட, அந்த சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவர் கண்கலங்கியுள்ளார்.
இந்த காட்சியை பாகிஸ்தான் ஊடகவியலாளர் Mazher Arshad ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.