1440 நிமிடங்கள் இடிபாடுகளில் புதைந்து உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை! நெஞ்சை உருக்கும் காட்சி
சீனாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய பச்சிளம் குழந்தை 24 மணிநேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர், Henan மாகாணத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடும் மழையால் Henan மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு கட்டிடங்கள் பல சரிந்துள்ளன.
இந்நிலையில், Xingyang நகரில் சரிந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வந்த பச்சிளம் குழந்தை, 24 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
A baby has been rescued after being trapped under the rubble of a collapsed house for 24 hours in Xingyang city, central China's Henan Province. #GLOBALink pic.twitter.com/0Myzssqce2
— China Xinhua News (@XHNews) July 23, 2021
மீட்பு குழுவினர் கட்டிட இடிபாடுகளிலிருந்து குழந்தையை மீட்ட நெஞ்சை உருக்கும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.