2024, மார்ச் 17... அன்றுதான் புடினுடைய ஆட்சி கவிழ்த்தப்படும்: நிபுணர் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்
புடினுடைய ஆட்சி என்றைக்கு முடிவு வரும் என்பதை திகதி வாரியாக தெளிவாக தெரிவித்துள்ளார் நிபுணர் ஒருவர்.
இந்த தகவலை வெளியிட்டுள்ளவர், முன்னாள் வெள்ளை மாளிகை ஆலோசகரான Dr Fiona Hill ஆவார்.
ரஷ்ய ஜனாதிபதியான புடின், 2036ஆம் ஆண்டு வரை, தான் ஜனாதிபதி பதவியில் நீடிக்கும் வகையில் ரஷ்ய அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளார்.
ஆனால், நிஜத்தில் அவர் அவ்வளவு காலம் எல்லாம் பதவியில் நீடிக்க வாய்ப்பில்லை என்கிறார் Dr Fiona Hill. இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சி பீடத்தில் அமர்ந்துவிட்டார் புடின். 2024 மார்ச் 17ஆம் திகதியுடன் அவரது பதவிக்காலம் முடிவுக்கு வரவேண்டும். ஆனால், அவர் அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்து 2036ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், ரஷ்யாவில் பலருக்கு புடினுடைய இந்த திட்டத்தில் உடன்பாடு இல்லை, கருத்துவேறுபாடுகள் உள்ளன என்கிறார் Dr Fiona Hill. அதாவது, புடினுடய பதவிக்காலம் முடிந்ததும் நான் இந்த ஜனாதிபதி இருக்கையில் அமரவேண்டும் என்ற பலருக்கு உள்ளது. இது நான் ரஷ்யாவை ஒரு ஜனாதிபதியாக ஆட்சி செய்யவேண்டிய நேரம் இது என எண்ணும் பலர், திரைமறைவில் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதற்கேற்றாற்போல், 2024 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 17ஆம் திகதி, ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த நேரத்தில், புடினுக்குப் போட்டியாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பலர் முன்வருவார்கள் என்கிறார் Dr Fiona Hill.
Image: YOUTUBE/@Intelligence Squared
அவர் கூறுவதை உறுதி செய்வாற்போல், சமீப காலமாக ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் புடினுடைய உக்ரைன் ஊடுருவலுக்கு எதிராக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள். சமீபத்தில், Leonid Vasyukevich என்னும் சட்டமன்ற உறுப்பினர், சட்டசபை கூட்டம் நடக்கும்போதே, போருக்கு எதிரான அறிக்கை ஒன்றை வாசித்தார், அப்படிச் செய்வது தன்னை 15 ஆண்டுகள் சிறைக்கு அனுப்பலாம் என்று தெரிந்தும் அவர் அப்படிச் செய்தார்.
அதேபோல, ஐக்கிய நாடுகளுக்கான அமைப்பு ஒன்றில் ரஷ்யா சார்பில் ஆலோசகராக இருந்த Boris Bondarev என்பவர், தன் நாட்டைக் குறித்து தான் அவமானப்படுவதாகக் கூறி தனது பதவியை ராஜினாமா செய்ததும் குறிப்பிடத்தக்கது.