மத்திய கிழக்கில் இறுகும் சூழல்... அரசு ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்ற பஹ்ரைன் அனுமதி
ஈரான் - இஸ்ரேல் மோதலில் திடீரென்று அமெரிக்கா புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அரசாங்க ஊழியர்களில் 70 சதவீதத்தினரை குடியிருப்பில் இருந்தே பணியாற்ற பஹ்ரைன் அனுமதி அளித்துள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை
பிராந்திய சூழ்நிலைகள் மற்றும் தற்போதைய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை, அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களிலும் 70 சதவீத பணியாளர்களும் குடியிருப்பில் இருந்தே பணிகளைத் தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்களைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளை திறமையாகப் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், தேவைப்படும்போது மட்டுமே குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பிரதான சாலைகளைப் பயன்படுத்துமாறும் பஹ்ரைன் வலியுறுத்தியுள்ளது.
பஹ்ரைனில் அமெரிக்காவின் இராணுவத் தளம் அமைந்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், அமெரிக்கா ஈரானிய அணுசக்தி நிலையங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து இந்த அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
In light of recent developments in the regional security situation, we urge citizens and residents to use main roads only when necessary, to maintain public safety and to allow the relevant authorities to use the roads efficiently.
— Ministry of Interior (@moi_bahrain) June 22, 2025
அமெரிக்கப் படைகள் ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்களைத் தாக்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை இரவு அறிவித்தார்.
மேலும், ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா மிகவும் வெற்றிகரமான தாக்குதலை முடித்ததாக ட்ரம்ப் கூறியிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |