சென்டினல் மக்களுக்கு Diet Coke கொடுத்த யூடியூபர்: நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு
அந்தமான் சென்டினல் தீவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பிரபல யூடியூபரின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அந்தமான் தீவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற யூடியூபர்
உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியினரான சென்டினல்(Sentinelese) இன மக்கள் வாழும் தீவு பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற உக்ரைன் நாட்டை சேர்ந்த யூடியூபர் மிகைலோ விக்டோரோவிச் பொல்யாகோவ்(Mykhailo Viktotovych Polyakov) இந்திய அதிகாரிகளால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
Neo Orientalist என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்த மிகைலோ விக்டோரோவிச் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் சிறிய ரப்பர் படகு மூலம் வடக்கு சென்டினல் தீவை அடைந்துள்ளார்.

கிட்டத்தட்ட 5 நிமிடம் வரை அங்கே இருந்த அவர், பழங்குடியினரான சென்டினல் மக்களுக்கு தேங்காய் மற்றும் டயர் கோக்(Diet coke) ஆகியவற்றை வழங்கியுள்ளார்.
இந்த பயணம் தொடர்பான வீடியோவை அவர் பதிவேற்றதை தொடர்ந்து அவர் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிணை மனு தள்ளுபடி
தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மிகைலோ விக்டோரோவிச் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் அவர் பிணை மனு தாக்கல் செய்து இருந்த நிலையில், அந்தமான் போர்ட் பிளேயர் நீதிமன்றம் அவரது பிணை மனுவை இந்த வாரம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 29ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஒருவேளை அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்டினல் மக்கள் கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகளாக வெளியுலகத் தொடர்பு இல்லாமல் வாழ்ந்து வருவதால், அவர்களை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசு தீவை சுற்றிய 5 கிலோமீட்டர் தூரத்திற்கு தடை விதித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |