பிரித்தானியாவில் நீர் தேக்க அணைக்குள் விழுந்த இளம் பெண்: சடலமாக மீட்கப்பட்ட துயரம்!
பிரித்தானியாவில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளம்பெண், அணைக்குள் விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
மேற்கு யார்க்ஷயர் காவல்துறை, ரிப்பொண்டன் அருகே உள்ள பைட்டிங்ஸ் நீர்த்தேக்கத்தில் இருந்து வியாழக்கிழமை மதியம் ஒரு சடலத்தை மீட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது.
மீட்கப்பட்ட சடலம், காணாமல் போன இளம்பெண்ணுடையது என காவல்துறை நம்புகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்தத் தகவல் இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைட்டிங்ஸ் அணையிலிருந்து ஒரு இளம்பெண் தண்ணீரில் விழுந்ததாகக் கிடைத்த தகவலை அடுத்து, அவசர சேவைகள் குழுவினர் புதன்கிழமை பிற்பகல் 1.17 மணியளவில் நீர்த்தேக்கத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
காவல்துறை, தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் குழுவினர், அத்துடன் நீருக்கடியில் தேடும் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
வியாழக்கிழமை வரை தேடுதல் பணி தொடர்ந்த நிலையில், சடலம் கண்டெடுக்கப்பட்டது.
ள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |