பதின்மவயது பெண்ணிடம் அத்துமீறிய புலம்பெயர் இளைஞர்கள்? பற்றியெரியும் வட அயர்லாந்து நகரம்
வட அயர்லாந்து நகரம் ஒன்றில், பதின்ம வயதுப் பெண் ஒருவரிடம், புலம்பெயர்ந்த இளைஞர்கள் இருவர் அத்துமீறியதாக கூறப்படும் விடயத்தால் நகரம் பற்றி எரிகிறது.
பற்றியெரியும் வட அயர்லாந்து நகரம்
வட அயர்லாந்திலுள்ள Ballymena நகரத்தில், பதின்ம வயதுப் பெண் ஒருவரிடம், புலம்பெயர்ந்த இளைஞர்கள் இருவர் அத்துமீறியதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து அந்நகரில் கலவரம் வெடித்துள்ளது. புலம்பெயர்ந்தோர் வாழும் வீடுகளைக் குறிவைத்து தாக்குதல்கள், தீவைப்பு சம்பவங்கள் நடந்துவருகின்றன.
தடுக்கச் சென்ற பொலிசாரை நோக்கியும் பெட்ரோல் குண்டுகள், கற்கள் மற்றும் பட்டாசுகள் வீசப்பட்டுள்ள நிலையில், இது ஏற்கனவே நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் என பொலிசார் கூறுகிறார்கள்.
அதாவது, வட அயர்லாந்துக்கு புலம்பெயரும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், அங்குள்ள ஒரு கூட்டம் புலம்பெயர்ந்தோர் மீது வெறுப்பு வைத்துள்ளது.
தற்போது பதின்மவயதுப் பெண்ணொருவர் புலம்பெயர்ந்தோரால் பாதிக்கப்பட்டதாக தகவல் வந்ததையடுத்து, அதை பயன்படுத்திக்கொண்டு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது அந்தக் கூட்டம் என்கிறார்கள் பொலிசார்.
இந்த தாக்குதலில் ஆறு கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் நான்கிற்கு தீவைக்கப்பட்டுள்ளது. பல அலுவலகங்களின் கதவுகளும் ஜன்னல்களும் நொறுக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. 15 பொலிசார் காயமடைந்துள்ளார்கள்.
இந்த வன்முறை தொடர்பாக ஒரே ஒரு 29 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |