தீயில் கருகிய 1000 விலங்குகள்..!பாங்காக்கின் சத்துசாக் சந்தையில் பெரும் விபத்து
பாங்காக்கின் பிரபல சத்துசாக்(Chatuchak) சந்தையில் தீ விபத்து ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தியது.
கிட்டத்தட்ட 1,000 விலங்குகள் உயிரிழப்பு
செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரத்தில், பாங்காக்கின் பிரபல சத்துசாக்(Chatuchak) சந்தையில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
செல்லப்பிராணி பிரிவில் கிட்டத்தட்ட 100 கடைகளை விபத்து பாதித்ததுடன், கிட்டத்தட்ட 1,000 விலங்குகள் தீயில் உயிரிழந்தன.
IN PICTURES: A fire ripped through pet shops at Bangkok's Chatuchak Weekend Market, killing more than 1,000 animals, including dogs, cats, birds, snakes, spiders and Siamese fighting fish https://t.co/2l43ICu9PR (Photos: AFP) pic.twitter.com/58piZHVsUf
— CNA (@ChannelNewsAsia) June 11, 2024
மின்சாரக் குறைபாடு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.
துயரமான சம்பவம் என்றாலும், மனித உயிரிழப்பு அல்லது காயங்கள் எதுவும் பதிவாகவில்லை.
புதிய கோரிக்கைகள்
குறுகலான கூண்டுகள் மற்றும் மோசமான விலங்கு நலன் பராமரிப்பு தரங்கள் காரணமாக சத்துசாக் சந்தையின் செல்லப்பிராணி பிரிவு பல ஆண்டுகளாக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
விலங்கு உரிமை குழுக்கள் செல்லப்பிராணி பிரிவை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
இந்த தீ விபத்தால் சுமார் 118 கடைகளை பாதித்துள்ளது, 1,400 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |