பாகிஸ்தானை டெஸ்டில் ஒயிட்வாஷ் செய்த வங்காளதேசம்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வங்காளதேச அணி முழுமையாக கைப்பற்றியது.
அதிரடிகாட்டிய சாஜித் கான்
வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் நடந்தது.

வங்காளதேச அணி நிர்ணயித்த 437 ஓட்டங்களை இலக்கினை நோக்கி பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 316 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மொஹம்மது ரிஸ்வான் 75 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி இன்று கடைசி நாள் ஆட்டத்தைத் தொடங்கியது.
பவுண்டரிகளை விரட்டிய சாஜித் கான் 28 (36) ஓட்டங்களில் ஷாண்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
சதத்தை தவறவிட்ட ரிஸ்வான்
அடுத்து சதத்தை நோக்கி பயணித்த மொஹம்மது ரிஸ்வான் (Mohammad Rizwan) 94 ஓட்டங்களில் இருந்தபோது ஷோரிபுல் இஸ்லாம் பந்துவீச்சில் மெஹிதி ஹசனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
பின்னர் குர்ரம் ஷாஸத் வெளியேற பாகிஸ்தான் அணி 358 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இதன்மூலம் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான், டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
வங்காளதேச தரப்பில் குர்ரம் ஷாஸத் 4 விக்கெட்டுகளும், மொஹம்மது அப்பாஸ் 3 விக்கெட்டுகளும், ஹசன் அலி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |