வங்கதேச துணி சந்தையில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க ராணுவத்தினர் அழைப்பு
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள துணி சந்தையில் திடீரென மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
துணி சந்தையில் தீ விபத்து
வங்கதேசத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தலைநகர் டாக்காவில் 3000 கடைகள் கொண்ட வணிக சந்தையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்து புகழ்பெற்ற துணிச்சந்தைகள் அமைந்த பங்காபஜாரின் நெரிசலான தெருக்களில் பரவியதை தொடர்ந்து, தீயை அணைக்க ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
AFP/Getty Images
இதுவரை உயிர் சேதம் எதுவும் பதிவாகாத நிலையில், தீயை அணைக்கும் பணியில் 50 தீயணைப்பு படைகள் மற்றும் ராணுவ வீரர்கள் செவ்வாய்கிழமை ஈடுபட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரும்பாலான கடைகள் தீயில் எரிந்து சாம்பலாகி இருக்கும் நிலையில், உள்ளே யாரும் சிக்கியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை என்று தீயணைப்புத் துறை அதிகாரி ரஷீத் பின் காலிட் தெரிவித்துள்ளார்.
?
— yogesh koundel (@bencher_middle) April 4, 2023
A big "fire" broke out in a clothing market called "Bangabazar" in Dhaka, which is the capital city of "Bangladesh".
Videos show that the fire was massive and many shops were destroyed. No one knows yet what caused the fire or if anyone got hurt.#Bangladeshfire pic.twitter.com/SHeUQZhLr3
வியாபாரி கதறல்
இதையடுத்து “கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகி விட்டன, இது போல் என் வாழ்நாள் ஒரு தீ விபத்தை பார்த்ததே இல்லை” என்று அப்துல் மன்னன் என்ற வியாபாரி அவரது உறவினரிடம் தொலைபேசியில் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
பங்காபஜாரில் பெரும்பாலான துணிக்கடைகளில் ஈத் பண்டிகைக்காக பொருட்கள் சேமித்து வைத்து இருந்த நிலையில், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இத்தகைய தீ விபத்துகளுக்கு தளர்வான ஒழுங்குமுறைகளே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
AFP/Getty Images