வங்காளதேச தலைநகரில் பயங்கர வெடி விபத்து: 14 பேர் பலி
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் 7 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
பயங்கர வெடி விபத்து
வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் குலிஸ்தன் பகுதியில் 7 மாடி கட்டிடத்தில் வணிக வளாகங்கள், பல்வேறு நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள இந்த 7 மாடி கட்டிடத்தில் செவ்வாய்கிழமை மாலை 5 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒட்டுமொத்த கட்டிடமும் நிலைகுலைந்தது.
AP Photo/Abdul Goni
14 பேர் பலி
இந்த வெடிவிபத்து குறித்து தகவலறிந்த பொலிஸார், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெடிவிபத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டிடத்தில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த ரசாய பொருட்கள் தீப்பற்றி வெடித்ததே இந்த கட்டிட வெடிவிபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், வெடிவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
REUTERS/Mohammad Ponir Hossain