இந்தியாவுடனான சர்வதேச போக்குவரத்து தடையை நீட்டிக்க வங்கதேசம் முடிவு!
கோவிட் -19 நிலைமையைக் கருத்தில் கொண்டு வங்கதேச அரசு இந்தியாவுடனான எல்லை மூடலை மேலும் நீட்டிக்க தீர்மானித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் இரட்டை உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கியபோது வங்கதேசம், இந்தியாவுடனான எல்லைகளை மூடியது. பிறகு தொடர்ந்து 2 முறை இந்த எல்லை அடைப்பு நீட்டிக்கப்பட்டது.
தற்போது இந்தியாவில் டெல்டா கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், வங்கதேசத்தில் நேற்று (ஜூன் 13) நடைபெற்ற உயர் மட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவுடனான எல்லையை திறப்பது குறித்து விவாதிக்கப்பட்டத்து.
அந்த விவாதத்தின் முடிவில் இந்தியாவுடனான எல்லை மூடலை தொடர்ந்து நீட்டிப்பதற்கு வங்கதேசம் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்து வருவதாலும், அதில் அதிகமானோர் டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக்க கூறப்படுகிறது.
இந்தியாவுடனான எல்லைகள் தற்போது மூடப்பட்டிருந்தாலும், 15 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான செல்லுபடியாகும் விசா கொண்ட வங்கதேச குடிமக்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள், அனால் அவர்கள் 14 நாள் கோவிட் -19 கட்டாய தனிமைப்படுத்தளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.