வங்கதேசத்திலிருந்து கடத்திவரப்பட்ட சிறுமி; வற்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கொடூரம்! தம்பதி உட்பட மூவர் கைது
பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகவே வங்க தேசத்திலிருந்து இந்தியாவுக்கு கடத்திவரப்பட்ட 17 வயது சிறுமையை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்தியாவின் குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று மனித கடத்தல் மற்றும் சிறார் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மிஜானூர் அல்லது ஷரிஃபுல் ஷெய்க் (36), அவரது மனைவி அஜ்மிரா கதுன் (32) மற்றும் ஏஜென்ட் முர்துசா ஷேக் (31) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விசாரணையில், மிஜானூரும் அவரது மனைவியும் சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்து சூரத் மாவட்டத்தின் கொல்வாட் கிராமத்தில் குடியேறி வசித்து வந்துள்ளனர்.
வருமானத்துக்கு வழியில்லாமல் தவித்துவந்த அவர்கள், ஒரு பெண்ணை தங்கள் சொந்த நாட்டிலிருந்து கடத்தி கொண்டு வந்து, பணம் சம்பாதிப்பதற்காக பாலியல் தொழிலில் தள்ள முடிவு செய்தனர்.
இதற்காக அங்கலேஷ்வரில் வசிக்கும் முர்துசா எனும் ஏஜெண்டை அணுகியுள்ளனர். முர்துசாவும் வங்கதேசத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று 17 வயது சிறுமியை ரூபாய் 15,000-க்கு விலைபேசி கடத்தி வந்துள்ளார்.
இந்திய எல்லைக்குள் சிறுமியை அழைத்துவர ஏற்பாடு செய்த மற்றோரு ஏஜெண்டுக்கு முர்துசா ரூபாய் 4,000 செலுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று Special Operation Team அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த ஒரு உதவிக்குறிப்பைக் கொண்டு, கம்ரேஜ் நகரத்தைச் சேர்ந்த மிஜானூர், அஜ்மிரா மற்றும் முர்டுசா ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.
மேலும், கடத்திவரப்பட்டு கட்டாயப்படுத்தி விபச்சர தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 17 வயது வங்கதேச சிறுமியை பொலிஸார் மீட்டனர். தற்போது அவர் சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பிவைக்கப்படடுள்ளார்.
இது குறித்து சூரத் பொலிஸ் கமிஷனர் அஜய் தோமர் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள இந்த குழு மேலும் வேறு எந்த சிறுமிகளையாவது இதே போன்று கட்டாயப்படுத்தியுள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.