திவாலாகும் பிரபல விமான சேவை நிறுவனம்: போராட்டத்தில் குதிக்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள்
இத்தாலியின் Alitalia விமான சேவை நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டு, தனது கடைசி சேவையை முடித்துக் கொண்டுள்ள நிலையில், ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இத்தாலியின் Alitalia விமான சேவை நிறுவனமானது நீண்ட 74 ஆண்டுகளாக முன்னெடுத்துவந்த பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ரோம் நகரத்தில் அமைந்துள்ள Fiumicino-Leonardo da Vinci விமான நிலையத்தில் இருந்து தமது கடைசி விமான சேவையை முன்னெடுக்க இருப்பதாக விமான பணிப்பெண் ஒருவர் அறிவித்ததுடன், இதுவரை தங்கள் விமான சேவையை பயன்படுத்தியமைக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
Alitalia விமான சேவை நிறுவனமானது இனி Italy Air Transport என்ற பெயரில் இயக்கப்பட உள்ளது. இத்தாலிய அரசு சுமார் 1.35 பில்லியன் யூரோ தொகையை Italy Air Transport நிறுவனத்திற்காக செலவிட உள்ளது.
ஆனால் மொத்தமுள்ள 10,000 Alitalia விமான சேவை ஊழியர்களில் நான்கில் ஒருபகுதி பேர்களை மட்டுமே தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்த இருப்பதாக ITA நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, Alitalia ஊழியர்கள் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஏற்பட்டனர். தற்போதைய சூழலில் ITA நிறுவனமானது மிலன் மற்றும் ரோமில் இருந்து நியூயார்க் நகருக்கும் ரோமில் இருந்து டோக்கியோ, பாஸ்டன் மற்றும் மியாமி நகருக்கும் விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
மட்டுமின்றி, ஐரோப்பிய பகுதிகளான பாரிஸ், லண்டன், ஆம்ஸ்டர்டாம், பிரஸ்ஸல்ஸ், பிராங்பேர்ட் மற்றும் ஜெனீவா நகரங்களுக்கு ரோமில் இருந்தும் மிலன் நகரில் இருந்தும் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.