இந்தியா சர்க்கரை ஏற்றுமதியை தடை செய்தது ஏன்... யாருக்கு விதிவிலக்கு?
உலகின் இரண்டாவது மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தியாளரான இந்தியா, உள்நாட்டு விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், செப்டம்பர் 2026 வரை சர்க்கரையை ஏற்றுமதி செய்யாது என்று அரசாங்கம் ஓர் அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.
தடை பொருந்தாது
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கு CXL மற்றும் TRQ ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் சர்க்கரை ஏற்றுமதிகள், முன்கூட்டியே அனுமதி வழங்கும் திட்டம் (AAS)-இன் கீழ் நடைபெறும் ஏற்றுமதிகள்,

மற்றும் பிற நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கங்களுக்கு இடையே நடைபெறும் ஏற்றுமதிகள் ஆகியவற்றுக்கு, இந்தத் தடை பொருந்தாது.
உள்நாட்டு உற்பத்தி நுகர்வை விடப் பின்தங்கியுள்ள நிலையில், போட்டி உற்பத்தியாளர்களான பிரேசில் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நுகர்வோருக்குத் தங்கள் ஏற்றுமதியை அதிகரிக்க வழிவகுக்கும் வகையில் இந்த முடிவு வெளியாகியுள்ளது.
இந்தத் தடை உலகளாவிய சர்க்கரை சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் ஏற்கனவே ஒப்பந்தங்களைக் கொண்டுள்ள வர்த்தகர்கள் சவால்களை எதிர்கொள்ளலாம்.
எதிர்பார்க்கலாம்
இந்த நடவடிக்கை உலகளாவிய வெள்ளை மற்றும் பதப்படுத்தப்படாத சர்க்கரை விலைகளை ஆதரிக்க வாய்ப்புள்ளது. அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில்,
பிற நாடுகள் தங்களின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்திய அரசாங்கம் வழங்கும் அனுமதியின் அடிப்படையிலும், அந்தந்த அரசாங்கங்களின் கோரிக்கையின் பேரிலும் சர்க்கரை ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளதால், உள்நாட்டு நுகர்வோர் குறுகிய கால விலை நிவாரணத்தையும், விநியோகப் பற்றாக்குறையில் தளர்வையும் எதிர்பார்க்கலாம்.
மட்டுமின்றி, பலவீனமான பருவமழையால் அடுத்த பருவத்தில் பயிர் விளைச்சல் மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதல் கையிருப்பை உருவாக்குவதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |