பிரித்தானியாவில் நள்ளிரவில் திடீரென பற்றி எரிந்த வீடு: முதலாளிகளின் உயிரை காப்பாற்றிய நாய்கள்
பிரித்தானியாவில் நள்ளிரவில் திடீரென தீ பற்றி எரிந்ததால், உயிருக்கு போராடி கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர்களை, காப்பாற்றிய வளர்ப்பு நாய்களின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தீடிரென பற்றிய தீ
பிரித்தானியாவின் எஸ்செக்ஸ் கவுண்டியில் உள்ள டன்மாவ் சாலையில் உள்ள ஒரு வீட்டில், கடந்த சனிக்கிழமையன்று நள்ளிரவில் திடீரென தீப்பிடித்துள்ளது.
அப்போது தீ எல்லா வீடுகளிலும் பரவி எரிய துவங்கியுள்ளன. இதனால் வீடுகளில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் நெருப்புக்குள் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
@twitter
இந்நிலையில் அந்த வீட்டு உரிமையாளர்களின் வளர்ப்பு நாய்கள், அங்கும் இங்கும் ஓடியபடி சத்தமாக குரைக்க துவங்கியுள்ளன. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த வீட்டு உரிமையாளர், வீடுகள் தீப்பிடித்து எரிவதை அறிந்து உடனடியாக தன் மனைவியுடன் வெளியேறினார்.
சிறிது நேரத்தில் வீட்டின் மேற்பகுதி கொழுந்து விட்டு எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்நிலையில் வளர்ப்பு நாய்கள் சரியான நேரத்தில் குரைக்காது இருந்திருந்தால், உரிமையாளர்களின் உயிரை காப்பாற்றியிருக்க முடியாது போயிருக்கும்.
உயிரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்கள்
பின்னர் வீட்டை வீட்டு வெளியேறியதும் அங்கிருந்தவர்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.
இதனிடேயே வீட்டின் பின்புறத்தில் ஏற்பட்ட தீ கசிவால் வீடுகளின் மீது தீ பரவியிருக்கலாம், என தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Crews have extinguished a house fire in Takeley this morning.
— Essex Fire Service (@ECFRS) May 21, 2023
Full story ➡️ https://t.co/R2yMaldn4e pic.twitter.com/xLOqnlG3zk
அந்த வீடு கடுமையாக சேதமடைந்ததால் குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சரியான நேரத்தில். குரைத்து உரிமையாளர்களின் உயிரை காப்பாற்றிய நாய்களின் செயலை, தீயணைப்பு படையினர் பாராட்டியுள்ளனர். மேலும் தீ பற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.