கோலி, ரோகித்தை தவிர வேறு யாராலும் இதை சமாளிக்க முடியாது! இந்திய வீரர்கள் குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஓபன் டாக்
இந்தியா-பாகிஸ்தான் போட்டியால் ஏற்படும் அழுத்தத்தை கோலி, ரோகித் தவிர மற்ற இந்திய வீரர்களால் சமாளிக்க முடியாது என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார்.
2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை சமீபத்தில் ஐசிசி வெளியிட்டது.
இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் முதல் போட்டியிலே சந்திக்கின்றன.
இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் கூறியதாவது, ஐசிசி எப்போதுமே இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியை முதல் போட்டியாக அட்டவணையிடும், ஏனெனில் இதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை டி20 உலகக் கோப்பை பக்கம் திரும்புவதற்காக.
இந்தியா-பாகிஸ்தான் போட்டியால் ஏற்படும் அழுத்தத்தை கோலி, ரோகிர் தவிர மற்ற இந்திய வீரர்களால் சமாளிக்க முடியாது.
தனிப்பட்ட முறையில், பாகிஸ்தான் வளர்ந்து வருவதாக உணர்கிறேன்.
இந்தியாவில், விராட் மற்றும் ரோகித் இருவரும் நல்ல ரன்களை அடிக்கக்கூடிய இரண்டு வீரர்கள். அதற்காக மற்றவர்கள் சிறப்பாக விளையாடமாட்டார்கள் என்று நான் சொல்லவில்லை.
ஆனால் இந்த இரண்டு வீரர்களும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடவில்லை என்றால், மற்றவர்களால் அந்த அழுத்தத்தை சமாளிக்க முடியாது.
நான் பல இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்களில் விளையாடியுள்ளேன், முதல் போட்டியில் தோற்றால், அது எப்போதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
2021 டி20 உலகக் கோப்பையில் முதல் போட்டியில் நாங்கள் வென்றபோது, இந்தியா வீரர்கள் இயல்பாக இல்லை என்பதை அனைவரும் பார்த்திருப்பீர்கள்.
ஏனெனில் வீரர்கள் சந்திக்க வேண்டிய அழுத்தத்தின் அளவு மிகப்பெரியது, நீங்கள் வெற்றி பெறத் தவறினால், அது மிகவும் கடினமாகிவிடும் என முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார்.