மும்பை வீரர்களுக்கு ஆப்பு வைக்க ரெடியாகும் கங்குலி! உற்று நோக்கும் பிசிசிஐ: தப்பிக்குமா ரோகித் படை?
ராஜஸ்தான் அணிக்கெதிரான இன்றைய ஐபிஎல் போட்டியை பிசிசிஐ மிக முக்கியமானதாக கவனிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டி இரண்டு அணிகளுக்குமே வாழ்வா? சாவா? என்ற போட்டி போன்று தான். தோல்வியடையும் அணி, பிளே ஆப் சுற்று கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது தான் அர்த்தம். அதுமட்டுமின்றி இப்போட்டி பிசிசிஐ-க்கும் மிக முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.
ஏனெனில், டி20 உலகக்கோப்பை தொடர், இதே ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடைபெறுகிறது. ஆனால் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள மும்பை வீரர்களான, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்திக் பாண்ட்யா, ராகுல் சஹார் போன்றோர் அந்தளவிற்கு விளையாடவில்லை.
இதனால் இந்திய அணி இதே வீரர்களுடன் உலகக்கோப்பைக்கு சென்றால் வெற்றி பெறுமா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
எனவே இன்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்த நான்கு பேரும் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க வேண்டும் அப்படியில்லை என்றால் சிறப்பாக விளையாடி வரும் ஷிகர் தவான், யுவேந்திர சஹால் போன்றோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம்.
ஐசிசிக்கு வரும் 10-ஆம் திகதி உலகக்கோப்பை அணிக்கான வீரர்களின் பட்டியலை அனுப்புவதற்கான கடைசி நாள், இன்னும் 5 நாட்கள் உள்ளதால் அதற்கு ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் பிசிசிஐ மாற்றிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.