ஐபிஎல் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கூரையைப் பிச்சிட்டு கொட்டும் பணம்! எவ்வளவு தெரியுமா?
இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐக்கு அடுத்த 5 ஆண்டு சுழற்சியில் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைகள் மூலம் மட்டுமே 5 பில்லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளது.
புதிய 2 ஐபிஎல் அணிகள் அறிமுகமாவதில் அதானி அணி மற்றும் இன்னொரு பெரிய பணமுதலை அணி வரும் என்று எதிர்பார்த்த நிலையில் வருவாய் அதிகரிப்பு எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
தற்போதைய 5 ஆண்டு சுழற்சி அதாவத் 2018-2022 ஐபிஎல் டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகள் ஸ்டார் நிறுவனத்திடம் உள்ளது. ஆனால் முடிவு எடுக்கும் இடத்தில் இருக்கும் நிர்வாகிகள் தரப்பிலிருந்து கூறப்படுவது என்னவெனில் தற்போது ரூ.16,347 கோடி அதாவது 2.5 பில்லியன் டொலர்களாக இருக்கும் ஒளிபரப்பு உரிம வரவு அடுத்த 5 ஆண்டு சுழற்சியில் அதாவது 2023-27 சுழற்சியில் தோராயமாக ரூ.36,000 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த பெரிய மீடியா முதலை ஒன்று ஐபிஎல் மீடியா உரிமங்களுக்காக ஆர்வம் காட்டி வருகிறது. 2022 ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகள் மோதவிருப்பதால் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக உயரவிருக்கிறது.
இதனையடுத்து சொத்து மதிப்பு, ஐபிஎல் வர்த்தக மதிப்பு எகிறுகிறது. மேலும் புதிய 2 அணிகள் மூலம் ரூ.7,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து ஒளிபரப்பு உரிமைகள் வானத்தைத் தொடும் என்று பிசிசிஐ எதிர்பார்க்கிறது. எனவே ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை மதிப்பு 5 பில்லியன் டொலர்கள் வரை உயரும். அக்டோபர் 25ம் திகதி துபாயில் பிசிசிஐ டெண்டர் வெளியிட உள்ளது.
இதே தினத்தில் புதிதாக இணையும் 2 ஐபிஎல் அணிகளையும் பிசிசிஐ அறிவிக்கவுள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் அணியை வைத்திருக்கும் கிளேசர் பேமிலி ஒரு ஒப்பந்தப் புள்ளியை எடுத்திருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் பிடிஐயிடம் தெரிவித்துள்ளன.