கனடாவில் பட்டப்பகலில் மூன்று வயது சிறுமியை தாக்கிய கரடி
கனடாவில் சிறுமி ஒருத்தியை கரடி ஒன்று தாக்கியதில் அவள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், மூன்று வயது சிறுமி ஒருத்தி கரடியால் தாக்கப்பட்டுள்ளாள்.
கரடி தாக்கியதால் சிறுமி காயம்
நேற்று காலை 11.30 மணியளவில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Maple Ridge நகரில் அமைந்துள்ள வீடொன்றின் வெளியே மூன்று வயது சிறுமி ஒருத்தி விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள்.

அப்போது அங்கு வந்த கரடி ஒன்று சிறுமியைத் தாக்கியுள்ளது. குழந்தையில் அலறல் சத்தம் கேட்டு அவளது தந்தை வந்து கரடியைத் துரத்தியுள்ளார்.
காயமடைந்த அந்தச் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவளது உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், தகவலறிந்து அங்கு வந்த பொலிசார், மீண்டும் மீண்டும் அந்தக் கரடி அங்கு வர முயற்சிப்பதைக் கவனித்துள்ளனர்.
மதியம் வாக்கில் மீண்டும் அந்தக் கரடி ஆக்ரோஷமாக அங்குவர, பொலிசார் அதை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
ஆனால், குண்டு பாய்ந்தும் அந்தக் கரடி காட்டுக்குள் ஓடிவிட்டிருக்கிறது.
கரடியைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுவரும் நிலையில், மக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குள் இருக்குமாறும், யாராவது கரடியைப் பார்த்தால் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவலளிக்குமாறும் பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேபோல, கடந்த ஞாயிற்றுக்கிழமை, இதே பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள South Chilcotin என்னுமிடத்தில் மலையேற்றத்துக்குச் சென்ற 72 வயது பெண்ணொருவரையும் ஒரு கரடி தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |