கொலைகார கரடியிடம் சிக்கிய சுற்றுலா பயணிகள்: பதறவைக்கும் சம்பவத்தின் பகீர் பின்னணி
சைபீரியாவில் தேசிய பூங்கா ஒன்றில் கரடி ஒன்று சுற்றுலாப் பயணிகள் குழுவைத் தாக்கி 16 வயது சிறுவனைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் ஒருவர் காயமுடன் தப்பியதாக Krasnoyarsk பிராந்திய நிர்வாகம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை பகல் 11 மணியளவில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில், பூங்கா காவலர்களால் குறித்த கரடி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.
கரடியிடம் இருந்து தப்பிய சுற்றுலா பயணி, தம்மிடம் இருந்த கத்தியால் கரடியை தாக்கியதாகவும், அதன் பின்னர் எஞ்சிய சுற்றுலா பயணிகள் அளித்த தகவலை அடுத்து காவலர்கள் துப்பாக்கியுடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அந்த கரடியானது 16 வயது சிறுவனின் பாதி உடலை தின்று தீர்த்ததாக தெரிய வந்துள்ளது. காவலர்களை கண்டதும் அந்த கரடி வனப்பகுதிக்குள் மாயமாகியுள்ளது.
ஆனால் அடுத்த நாள் சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு கரடியை சுற்றிவளைத்த காவலர்கள் அதை சுட்டுக் கொன்றுள்ளனர்.
போதிய உணவு கிட்டாத நிலையிலேயே கரடி தாக்குதலுக்கு முயன்றதாக பூங்கா நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், பூங்காவின் உள்ளே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.