அழகியல் சிகிச்சைக்கு முன் மருத்துவருடன் பார்ட்டிக்குச் சென்ற இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட துயர முடிவு
தனது உடலை மேலும் அழகாக்கிக்கொள்வதற்காக துருக்கிக்கு சென்ற அழகிய இளம்பெண்ணொருவர், பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட துயர முடிவு
இளம்பெண்கள் தங்கள் முகம், மூக்கு, மார்பகங்கள் மற்றும் பின்பக்கங்களை மேலும் அழகாக்கிக்கொள்வதற்காக துருக்கி நாட்டுக்குச் செல்வது அதிகரித்துவரும் அதே நேரத்தில், துருக்கியில் அழகியல் சிகிச்சைக்குச் செல்லும் இளம்பெண்கள் உயிரிழப்பதும் அதிகரித்துவருகிறது.
Mozambique நாட்டவரான அனா பார்பரா (Ana Bárbara Buhr Buldrini, 31), கடந்த வெள்ளிக்கிழமை, அழகியல் சிகிச்சைக்காக துருக்கிக்குச் சென்றுள்ளார்.
சிகிச்சைக்கு முன்தினம், தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்போகும் மருத்துவருடன் பார்ட்டியிலும் கலந்துகொண்டுள்ளார் அனா.
ஞாயிற்றுக்கிழமை அனாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை முடிந்த சிறிது நேரத்தில், செவிலியர்கள் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓட, ஒன்றேகால் மணி நேரம் வரை மனைவியைக் காண காத்திருந்த அனாவின் கணவரான எல்கர் மைல்ஸ், என்ன பிரச்சினை என விசாரித்துள்ளார்.
அப்போது, அனாவின் இதயத்துடிப்பு குறைந்துவருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
சிறிது நேரத்தில், அன்னா மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக அவரது கணவருக்கு தகவல் கூறப்பட்டுள்ளது.
அழகியல் சிகிச்சைக்காக வந்த அனா, சொந்த நாட்டுக்கு உயிருடன் திரும்பிச் செல்லவேயில்லை.
அனாவைப்போலவே அவரது கணவர் எல்கர் மைல்ஸும் ஒரு பாடகர்தான். ஆறு ஆண்டுகளுக்கு முன் ரோமில் இருவரும் சந்தித்த நிலையில், கடந்த மாதம்தான் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |