பிச்சைக்காரரிடம் பண உதவி கேட்ட இளைஞன்! சிறிதும் தாமதிக்காமல் செய்த காரியம்... வியக்க வைக்கும் வீடியோ
நைஜீரியாவில் பிச்சைக்காரரிடம் சென்று பணம் கேட்ட இளைஞருக்கு அதிர்ச்சி காத்திருந்த நிலையில் மனிதநேயமிக்க மனிதருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. அதன்படி, பிச்சைக்காரர் ஒருவரிடம் மனித நேயம் எவ்வளவு இருக்கிறது என்பதை அறிய விரும்பிய இளைஞர் அவரிடம் நேராக சென்றிருக்கிறார்.
பின்னர் எனக்கு உணவு மற்றும் தண்ணீர் வாங்க பணம் கொடுத்து உதவ முடியுமா என பிச்சைக்காரரிடம் கேட்டார். இதையடுத்து சற்றும் தாமதிக்காத பிச்சைக்காரர் தன் மேல்சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை அப்படியே எடுத்து இளைஞரிடம் கொடுத்து வியக்க வைத்துள்ளார்.
இதை எதிர்பார்க்காத இளைஞர் ஒரு கணம் அதிர்ச்சியடைந்த போதிலும் பின்னர் சுதாரித்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் பிச்சைக்காரரிடம் வந்த அவர் உங்களை பரிசோதிக்க வெறுமனே ஒரு டெஸ்ட் வைத்தேன் என கூறியவாறு தன்னிடம் இருந்த பணத்தை அவரிடம் கொடுத்ததோடு, பிச்சைக்காரர் தனக்கு கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுத்தார்.
இது தொடர்பான வீடியோவை பார்த்த பலரும், பிச்சை எடுக்கும் நிலையிலும் மற்றவர்கள் மீது அன்பு செலுத்தி பணம் கொடுக்கும் அவர் மனித நேயம் கொண்ட மாமனிதர் என பாராட்டியுள்ளனர்.