பிச்சையெடுக்க விமானத்தில் பறந்து செல்லும் மக்கள்: நெருக்கடிக்குள் பாகிஸ்தான் பொருளாதாரம்
வளைகுடா நாடுகளில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பாகிஸ்தானியர்களே காரணம் என குற்றச்சாட்டுகள் வெளிவர தொடங்கியுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்
பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
இதனால் பாகிஸ்தான் மக்கள் வறுமையில் அவதிப்படுவதோடு, புனித யாத்திரைக்கான விசா மற்றும் பயண சலுகைகளை பயன்படுத்தி வளைகுடா நாடுகளுக்கு யாசகம் தேடி பாகிஸ்தானியர்கள் செல்வதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஈரான், ஈராக் மற்றும் சவுதி அரேபியாவில் யாசர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பாகிஸ்தானியர்களே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக ’டான்’ மற்றும் ’தி நேஷன்’ ஆகிய செய்தி நிறுவனங்கள், புனித தலங்களில் யாசகம் கேட்பவர்கள் மற்றும் பிக்பாக்கெட் அடிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் பாகிஸ்தானியர்கள் என செய்தி வெளியிட்டுள்ளன.
புள்ளி விவர அடிப்படையில் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் சில பாகிஸ்தானியர்கள் சவுதி அரேபியா வழியாக ஜப்பானுக்கு சென்றும் யாசகம் செய்வதாக குறிப்பிட்டுள்ளது.
கை விரித்த அரசு
இந்நிலையில் புனித தலங்களுக்கான விசாவை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு செல்லும் பாகிஸ்தானியர்களை கண்காணித்து கட்டுப்படுத்த முடியவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் உம்ரா விசாவை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சென்று அங்கு யாசகம் செய்வதுடன், ஹராம் போன்ற புனித தலங்களில் பிக்பாக்கெட் அடிக்கிறார்கள் என்பது பாகிஸ்தான் நாட்டிற்கு சங்கடம் விளைவிக்கக் கூடியதாக மாறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |