விரையும் போர்க்கப்பல்கள்.. பிரித்தானியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை
ஆசிய கடலுக்கு இரண்டு போர்க்கப்பல்களை நிரந்தரமாக ஒதுக்கும் திட்டத்தை பிரத்தானியா அறிவித்ததை அடுத்து சீனா கடும் எச்சிரிக்கை விடுத்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் ஆசிய கடலுக்கு இரண்டு போர்க்கப்பல்களை நிரந்தரமாக ஒதுக்கும் திட்டத்தை பிரித்தானியா பாதுகாப்பு செயலாளர் Ben Wallace அறிவித்தார்.
அவுஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவுடனான நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக பிரித்தானியா இரண்டு போர்க்கப்பல்களை அனுப்புவதாக Ben Wallace குறிப்பிட்டார்.
இந்நிலையில், இந்த நடவடிக்கையின் மூலம் பிரித்தானியா அதன் பலத்தை காட்டுவதற்கு எதிராக சீன எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவை சுற்றியுள்ள கடலில் சர்வதேச சட்டத்தின் படி அனைத்து நாடுகளும் அனுபவிக்கின்றன.
சீன அதை சுற்றியுள்ள கடலில் கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து சுதந்திரத்தை மதிக்கிறது என நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Zhao Lijian கூறினார்.
அதே நேரத்தில், சீனாவிடம் இராணுவ பலத்தை காட்டும் நடைமுறையை உறுதியாக எதிர்க்கிறது என Zhao சுட்டிக்காட்டினார்.
ஆசியாவிற்கு போர்க்கப்பல்களை அனுப்பும் பிரித்தானியாவின் சீண்டும் செயல், சீனாவின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, மேலும் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கிறது என்றும் கூறினார்.