ஒருவருக்கு கொரோனா... மொத்த அலுவலக கட்டிடத்தையும் மூடிய சீனா: ஊழியர்கள் கதி?
சீனா தலைநகர் பீஜிங்கில் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த அலுவலகத்தையும் அரசு அதிகாரிகள் மூடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் சிக்கியுள்ளனர். மேலும், ஊழியர்கள் அனைவரும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே விடுவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக பீஜிங் நகரம் உயர் எச்சரிக்கை நடவடிக்கையில் கொண்டுவரப்பட்டிருந்தது. தலைநகரில் இருந்து 30 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ள துறைமுக நகரமான Tianjin-ல் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதை அடுத்தே இந்த கட்டுப்பட்டுகள்.
பாதிப்புக்குள்ளான நபர் கடந்த 14 நாட்களில் நகரத்தை விட்டு வெளியே செல்லாதவர் எனவும், நோய் பாதித்தவர்களுடன் நெருங்கி பழகாதவர் எனவும் தெரிய வந்துள்ளது.
இதனால், ஏற்கனவே குறித்த பகுதிகளில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதாகவே அச்சம் எழுந்துள்ளது.