4,000 தங்க நாணயங்கள், தங்கக்கட்டிகள் - 18 வயது மாணவன் கண்டுபிடித்த புதையல்
பெல்ஜியத்தில் 18 வயது மாணவர் ஒருவர் தனது கோடை விடுமுறை காலத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராத விதமாக 9 மில்லியன் யூரோ மதிப்புள்ள தங்கச் செல்வத்தை கண்டுபிடித்துள்ளார்.
கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியில் மாணவர்
Sint-Gillis-Dendermonde பகுதியில் பழைய பீர் தொழிற்சாலை அருகே கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாணவர் கோபே (Kobe), முதலில் 1 யூரோ நாணயங்கள் கிடைத்ததாக நினைத்தார்.

ஆனால், விரைவில் அவர் மற்றும் அவரது சக தொழிலாளர்கள் தங்க நாணயங்கள் மற்றும் தங்கக்கட்டிகள் அடங்கிய பெரிய புதையலைக் கண்டுபிடித்தனர்.
4,000 தங்க நாணயங்கள்
இந்த புதையல், பழைய வில்லாவின் அடித்தளத்தில் சுவருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பையில் இருந்தது. பொலிஸார் வெளியிட்ட புகைப்படங்களில் 40 முதல் 49 தங்கக் கட்டிகள் மற்றும் சுமார் 4,000 தங்க நாணயங்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வில்லா, 1899-ஆம் ஆண்டு பீர் தொழிற்சாலை உரிமையாளர் தியோபிலஸ் வான் அச்ஷேக்காக கட்டப்பட்டது. 1970 வரை பீர் உற்பத்தி நடைபெற்ற இந்த இடம் தற்போது சமூக நல அமைப்பின் அலுவலகம் மற்றும் வீடுகளாக மாற்றப்படுகிறது.

பெல்ஜிய சட்டப்படி...
புதையல் தற்போது பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு, அதன் சட்டபூர்வ உரிமையாளர் யார் என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையதா அல்லது வான் அச்ஷே குடும்பத்தின் செல்வமாக இருக்கிறதா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
பெல்ஜிய சட்டப்படி, கண்டுபிடிக்கப்பட்ட பொருளின் உரிமையாளர் வெளிப்பட சில காலம் வழங்கப்படும். அதன் பிறகு, கண்டுபிடிப்பவருக்கும் நில உரிமையாளருக்கும் உரிமை வழங்கப்படும். கோபே மற்றும் அவரது குழுவினர் புத்தியை பொலிசாரிடம் ஒப்படைத்ததால், எதிர்காலத்தில் அவர்களுக்கு “finder’s reward” வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |