அக்டோபர் 1 முதல் இது கட்டாயமில்லை! ஐரோப்பிய நாடு ஒன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வருகின்ற அக்டோபர் 1ஆம் திகதி முதல் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று பெல்ஜியம் அரசாங்கம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெல்ஜியம் நாட்டில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திவிட்டதால் வருகின்ற அக்டோபர் 1ஆம் திகதி முதல் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என்று பெல்ஜியம் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாட்டில் ஒன்றரை வருடங்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. கொரோனாவை எதிராக பயன்படுத்தப்படும் பேராயுதமாய் கொரோனா தடுப்பூசி செயல்பட்டு வருகின்றது.
பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்திவிட்ட நாடுகள் முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஐரோப்பா நாடான பெல்ஜியத்தின் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரோ செய்தியாளர்களிடம் பேசியதாவது, இதுவரை எங்களது நாட்டில் 84 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.
இதனால் அக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் யாரும் முகக்கவசம் அணிய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.