மோசமான செயலை செய்த பாகிஸ்தான் வீரர் - 4 ஆண்டுகள் கழித்து பழிவாங்கிய ஆஸி. வீரர்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் தன்வீர் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் பென் கட்டிங் ஆகியோர் இடையேயான நடுவிரல் பஞ்சாயத்து மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற கரீபியன் ப்ரீமியர் லீக்கில் பாகிஸ்தான் வீரர் சோஹைல் தன்வீர் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் பென் கட்டிங் ஆகியோர் இடையே நடந்த மோதல் இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாததது. இருவரும் வெவ்வேறு அணியில் விளையாடிய நிலையில் ஒரு போட்டியில் பென் கட்டிங்கை க்ளீன் போல்ட்டாக்கிய பவுலர் சோஹைல் தன்வீர் தனது 2 நடுவிரல்களையும் காட்டி அவரை அவமானப்படுத்தினார்.
Revenge is sweet ?? @Cuttsy31 ? #PZvsQG #bencutting #sohailtanvir pic.twitter.com/RFu30pznA0
— عَبْد اللّٰه خان????✨ (@pukhtann) February 15, 2022
இதனைத் தொடர்ந்து சோஹைல் தன்வீருக்கு ஒழுங்கீன நடவடிக்கையாக போட்டி கட்டணத்தில் இருந்து 15% அபராதமாக விதிக்கப்பட்டது. இதனிடையே கிட்டதட்ட 4 ஆண்டுகள் கழித்து தன்வீருக்கு பிஎஸ்எல் தொடரில் பென் கட்டிங் பதிலடி கொடுத்துள்ளார்.
தன்வீர் வீசிய 19வது ஓவரில் பென் கட்டிங் 4 சிக்ஸர்களுடன் சேர்த்து மொத்தம் 27 ரன்களை விளாசித் தள்ளினார். இதன் பிறகு தன்வீரை பார்த்து தனது 2 நடுவிரல்களையும் காட்டி பழி தீர்த்துக்கொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை களநடுவர்கள் தீர்த்து வைத்த நிலையில் கடைசி ஓவரில் விதி மீண்டும் விளையாடியது.
அதாவது நதீம் ஷா பந்துவீச்சில் பென் கட்டிங் தூக்கி அடித்த பந்தை தன்வீர் தான் கேட்ச் பிடித்தார். இதனால் உற்சாகத்தில் மிதந்த அவர் மீண்டும் தனது நடுவிரலை காண்பித்து பிரச்சினையை கிளப்பியுள்ளார்.