காலை எழுந்தவுடன் ஒரு கப் வெந்தய நீர்.., என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயம் உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
அந்தவகையில், காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் வெந்தய நீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
வெந்தய நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இரவில் தூங்கும் முன் தண்ணீரில் 1 ஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் காலையில் வெந்தயத்தை தண்ணீருடன் சாப்பிடலாம்.
கிடைக்கும் நன்மைகள்
வெந்தயத்தில் ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதால் சரும பிரச்சினைகள் நீங்கி சருமத்திற்கு பளபளப்பைக் கொண்டுவரும்.
வெந்தத்தில் நார்சத்து உள்ளதால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீரைக் குடித்தால் எடையைக் கட்டுப்படுத்துகிறது.
அதேபோல், தினமும் வெந்தய நீரைக் குடித்து வர அமிலத்தன்மை பிரச்சனை நீங்கும்.
மேலும், முக்கியமாக வெந்தய நீரில் அமினோ அமிலம் உள்ளதால் உடலின் இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் வெந்தய நீரைக் குடித்தால், சளி மற்றும் இருமலில் இருந்து பெரும் நிவாரணம் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |