பாலில் மஞ்சள் கொஞ்சம் கலந்து குடிச்சு பாருங்க! நம்பமுடியாத மாற்றம் உடலில் நடக்குமாம்
அனைவரது வீட்டிலும் தவறாமல் இருக்கும் ஒரு பொருள் மஞ்சள். இது சமைப்பதற்கு மட்டுமின்றி பல உடல்நலப் பிரச்சனைகளுக்கும் சிகிச்சையளிக்க வீட்டு வைத்தியத்தில் பயன்படுகிறது.
இதில் வைட்டமின் ஏ, தியாமின் (பி 1), ரிபோஃப்ளேவின் (Riboflavin) (பி 2), வைட்டமின் சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்டவை அடங்கி உள்ளன.
இதனை பாலில் கலந்து குடிப்பதனால் இன்னும் பல நன்மைகள் நம்மை வந்து சேருகின்றது.
அந்தவகையில் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதனால் உடலுக்கு பல நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் குர்குமின் நமது உடலின் கொழுப்பு மற்றும் திசுக்களில் உறிஞ்சப்படுவதால், அது உடலுக்கு நன்மை பயக்கிறது.
- புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்க மெட்டாஸ்டேடிக் நோய் பரவுவதை தடுக்க மஞ்சள் கலந்த பால் உதவும். புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு சிகிச்சையின் எதிர்மறை விளைவுகளை குறைக்கவும் மஞ்சள் பால் உதவும்.
- பாலில் மஞ்சள் சேர்ப்பது தொண்டை புண், இருமல் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. தினமும் மஞ்சள் பால் குடித்தால் சளி தொந்தரவை எதிர்த்து போராடலாம்.
- கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் உள்ளிட்ட மூட்டு மற்றும் எலும்பு பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் மஞ்சள் பால் நன்மை பயக்கும்.
- மஞ்சள் பால் உடல் எடையை குறைக்கவும், உடல் பருமனை தடுக்க உதவும். அதிக எடை நபர் மஞ்சள் பாலை தொடர்ந்து குடிப்பதால் அவர் விரும்பும் படி எடையை குறைக்கலாம்.
- மஞ்சள் பாலில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம். இது செல் சேதத்தைத் தடுக்கிறது மற்றும் வயதாகும் செயல்முறையை கணிசமாக குறைக்கிறது. மேலும் வழக்கமாக மஞ்சள் கலந்த பால் குடிப்பது தோலில் ஆழமான சுருக்கங்கள் மற்றும் கோடுகளை தடுக்க உதவுகிறது.