உணவின் முழுஊட்டச்சத்துக்கும் உத்தரவாதம் தரும் மண்பானை
Healthy Food Recipes
By Kirthiga
முன்னைய காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் சமையலுக்கு மண்பாண்டத்தை பயன்படுத்தி தான் சமைத்து வந்தார்கள்.
அவர்கள் உணவில் அலாதி சுவைக்கு அதுவும் ஒரு காரணமாக தான் இருந்தது.
இப்போது எல்லாம் எவ்வளவு சுவையாக சமைத்தாலும், ஒரு குறையுள்ளது என்றே தோன்றும். அதற்கு எல்லாம் காரணம் சமைக்கும் பாத்திரம் தான்.
ஆகவே மட்பாண்டங்களை பயன்படுத்துவது நல்லது. அதை சிலர் வீட்டிலேயே வடிவமைத்துக் கொள்வார்கள்.
அவ்வாறு சுவையான உணவுக்கும் ஆரோக்கியமான உடலுக்கும் உதவும் மண்பாண்டத்தில் என்ன நன்மைகள் அடங்கியுள்ளது என்று தெரிந்துக்கொள்வோம்.
- மண்பானையில் சமைத்தால் உணவு சுவையாக இருக்கும்.
-
ஒரு வாரத்திற்கு மேலும் சமைத்த உணவை வைத்திருக்கலாம்.
-
இதில் சமைத்து சாப்பிட்டால் சமைக்கும் அனைத்து பொருட்களில் உள்ள சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும்.
-
மண்பானையில் உள்ள நுண் துளைகளால் உணவுக்குள் வெப்பம் சீராகவும், சமநிலையிலும் செல்லும்.
-
மண்பானைச் சமையலுக்கு அதிக எண்ணெய் தேவைப்படாது. ஆகவே உடலுக்கும் தீங்கு தராது.
-
சமைத்த உணவு ஆறாமல் சீரான வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்கும்.
-
உணவில் உள்ள அமிலத் தன்மையைச் சமன்படுத்தும்.
-
நல்ல பசியையும் நல்ல தூக்கத்தையும் தரும்.
-
மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவும்.
-
குழந்தையின்மைப் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும்.
-
உணவு ரத்தக் குழாய்களைச் சீராக்கும்.
- உடல் சூட்டைத் தணிக்கும்.
மேலும் அறுசுவையான உணவும் ஆரோக்கியமான வாழ்வும் கிடைக்க வேண்டுமென்றால் மண்பானையில் சமைத்துச் சாப்பிடுவதே சிறந்தது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US