ஜேர்மனியில் யூத கோவில் மீது தாக்குதல்: தாக்குதல்தாரிகளை வலைவீசி தேடி வரும் பொலிஸார்
இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் ஜேர்மனியில் உள்ள யூத வழிபாட்டு தலம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தாக்குதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜேர்மனி, பிரித்தானியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜேர்மனியின் பெர்லின் நகர் மையத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற யூத கோயில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த யூத கோவிலின் சார்ப்பில் ஜேர்மனியில் பள்ளி-கல்லூரி மற்றும் தங்கும் விடுதிகள் ஆகியவை நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
நள்ளிரவில் வழிபாட்டு தலத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், வெடிக்கும் தன்மை கொண்ட வேதிப் பொருள் எறிந்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
பொலிஸார் வலைவீச்சு
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் யூத கோவிலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் தப்பியோடிய மர்ம நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் ஜேர்மன் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் யூத கோவில் மீதான தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |