Nature Black Hair: கருமையான தலைமுடியை வளர்ப்பதற்கு ஆசையா?
பொதுவாகவே பெண்களுக்கு முடி என்றாலே ஒரு விருப்பம் இருக்க தான் செய்யும். ஆனால் அதை சரியான முறையில் கவனிக்காமல் மனஅழுத்தத்தில் இருப்பார்கள்.
உங்கள் தலைமுடி எப்போதும் அடர்த்தியாகவும் வேகமாகவும் வளர நீங்கள் அடிக்கடி பல முயற்சிகளை செய்து இருப்பீர்கள்.
இருப்பினும் அடர்த்தியான கூந்தல் உங்களுக்கு கிடைத்திருக்காது. இயற்கையான முறையில் மேற்கொண்டால் கூந்தல் அடர்த்தியாக வளரும் என முன்னோர்கள் கூறி கேள்விபட்டு இருப்போம்.
எனவே வீட்டில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்து எப்படி இயற்கையான முறையில் முடியை நீளமாகவும் கருமையாகவும் வளர்க்கலாம் என பார்க்கலாம்.
இயற்கை முறை வைத்தியம்
தேவையான பொருட்கள்
- செம்பருத்தி பூ
- செம்பருத்தி இலை
- குப்பை மேனி
- மருகு
- மயில்
- மாணிக்கம்
- கருவேப்பிலை
- வேப்பிலை
- மருதாணி
- கற்றாழை
- கீழா நெல்லி
செய்முறை
- முதலில் இவை அனைத்தையும் அரைத்து வெயிலில் காய வைக்க வேண்டும்.
- பின் அதை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி எடுக்க வேண்டும்.
- இதை தினமும் பயன்படுத்தி வருவதன் மூலம் கருமையான மற்றும் நீளமான கூந்தல் கிடைக்கும் என கிராமத்து மூதாட்டிகள் கூறிவருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |