பாரதிராஜாவின் நிறைவேறாத ஆசை - அந்த நடிகரை வைத்து படம் இயக்க முடியவில்லை
பாரதிராஜா ஒரு நடிகரை வைத்து படம் இயக்க ஆசைப்பட்ட நிலையில் அது கடைசிவரை நிறைவேறவில்லை என கூறப்படுகிறது.
பாரதிராஜா மறைவு
இயக்குநர் இமயம் என அழைக்கப்படும் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் பாரதிராஜா இன்று உடல்நலக்குறைவால் தனது 84 வது வயதில் காலமாகியுள்ளார்.

பாரதிராஜாவின் மறைவிற்கு தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
1977 ஆம் ஆண்டில் 'பதினாறு வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இதற்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் 6 தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். மேலும், ஆயுத எழுத்து, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நிறைவேறாத ஆசை
ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, பிரியாமணி, சுகன்யா போன்ற பல்வேறு நடிகைகளையும், கார்த்திக் நெப்போலியன் போன்ற நடிகர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, சித்ரா லட்சுமணன், மனோஜ்குமார், பொன்வண்ணன், சீமான், லீனா மணிமேகலை ஆகியோர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

இப்படி பல்வேறு நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என பலருடனும் பணியாற்றிய பாரதிராஜாவிற்கு எம்.ஜி.ஆர்-ஐ வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் முதல்வர் ஆகிவிட்ட பின்னர் நடிக்கவில்லை என்பதால் அவரின் அந்த ஆசை கடைசிவரை நிறைவேறாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |