கடைசி நொடியில்... இந்திய AI உச்சிமாநாட்டில் இருந்து வெளியேறிய பில் கேட்ஸ்
இந்திய AI உச்சிமாநாட்டில் முக்கிய உரையாற்றவிருந்த பில் கேட்ஸ், நிகழ்ச்சி தொடங்கவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
உரையை வழங்க மாட்டார்
சீன தயாரிப்பான ரோபோவை பயன்படுத்திய விவகாரத்தில் ஏற்கனவே இந்திய AI உச்சிமாநாடு விவாதத்தில் சிக்கியுள்ள நிலையில், தற்போது பில் கேட்ஸ் விவகாரம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், AI உச்சிமாநாட்டின் முக்கிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, பில் கேட்ஸ் தனது உரையை வழங்க மாட்டார் என்று கேட்ஸ் அறக்கட்டளை விளக்கமளித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்புதான், அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்பது குறித்த வதந்திகளை கேட்ஸ் அறக்கட்டளை நிராகரித்தது, மேலும் அவர் கலந்துகொள்ளும் முனைப்பில் இருப்பதாகவும் வலியுறுத்தியது.
இந்த நிலையில், வியாழக்கிழமை திட்டமிட்டதன் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவஒல் மேக்ரான், கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, OpenAI தலைமை நிர்வாக அதிகாரி Sam Altman மற்றும் Anthropic தலைமை நிர்வாக அதிகாரி Dario Amodei ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.
ஏற்கனவே, Nvidia நிறுவனத்தின் Jensen Huang கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் அவர் மறுத்துள்ள நிலையில், தற்போது பில் கேட்ஸும் வெளியேறியுள்ளது கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

எப்ஸ்டீன் விவகாரத்தில்
உலகளாவிய AI நிர்வாகத்தில் இந்தியா தன்னை ஒரு முன்னணி குரலாக நிலைநிறுத்திக் கொள்ள முயன்று வரும் நிலையில், உலகளாவிய தெற்கில் முதல் பெரிய செயற்கை நுண்ணறிவு மன்றமாகக் கருதப்படும் உச்சிமாநாட்டிற்கு இது ஒரு கடினமான தொடக்கமாகவே அமைந்துள்ளது.
எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கியுள்ள பில் கேட்ஸ் கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையிலேயே, இந்திய AI உச்சிமாநாட்டில் இருந்து வெளியேறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எப்ஸ்டீனின் சிறைத்தண்டனைக்குப் பிறகு, கேட்ஸின் தொண்டு நிறுவன முயற்சிகளை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்க கேட்ஸ் மற்றும் எப்ஸ்டீன் பலமுறை சந்தித்ததாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
இந்த உறவு தொண்டு நிறுவனம் தொடர்பான விவாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது என்றும், எப்ஸ்டீனை சந்தித்தது தனக்கு ஏற்பட்ட தவறு என்றும் கேட்ஸ் கூறியுள்ளார்.
மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரான பில் கேட்ஸ் கடந்த 2000 ஆண்டு கேட்ஸ் அறக்கட்டளையைத் தொடங்கினார். உலகளாவிய சுகாதார முயற்சிகளின் உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்று இது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |