அறக்கட்டளையின் முழு சொத்துக்களையும் தானம் செய்ய உள்ள பில்கேட்ஸ் - எலான் மஸ்க் காரணமா?
2045 ஆம் ஆண்டுக்குள் கேட்ஸ் அறக்கட்டளையின் முழு சொத்துக்களையும் செலவிட உள்ளதாக பில்கேட்ஸ் அறிவித்துள்ளார்.
கேட்ஸ் அறக்கட்டளை
மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில் கேட்ஸ், 1995 முதல் 2007 வரை தொடர்ந்து, 13 ஆண்டுகள் உலகபணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.
இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு, அவரது முன்னாள் மனைவி மெலிந்தா உடன் இணைந்து, கேட்ஸ் அறக்கட்டளையை தொடங்கினார்.
கேட்ஸ் அறக்கட்டளை, கடந்த 25 ஆண்டுகளில் பல்வேறு சமூக பணிகளுக்காக 100 பில்லியன் டொலரை ஒதுக்கியுள்ளது.
வரும் 2045 ஆம் ஆண்டுக்குள் கேட்ஸ் அறக்கட்டளையின் சொத்துக்களை முழுவதும் செலவிட உள்ளதாகவும், 31 டிசம்பர் 2045 க்கு முன்னர் அறக்கட்டளையை மூட உள்ளதாகவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
பின்னணியில் எலான் மஸ்க்?
கொடிய நோய்களை எதிர்த்துப் போராடுவது, தாய் மற்றும் குழந்தை இறப்புகளைக் குறைப்பது, உலகளவில் வறுமையைக் குறைப்பது ஆகியவற்றிற்காக, அடுத்த இரண்டு தசாப்தங்களில், அதன் செலவினங்களை இரட்டிப்பாக்கி, 200 பில்லியன் டாலர்களை செலவிட உள்ளதாக அறிவித்துள்ளது.
எலான் மஸ்க் DOGE துறையின் தலைமை பொறுப்பை ஏற்ற பின்னர், அமெரிக்க வெளிநாட்டு உதவி(USAID) கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் இது 80% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2023 நிதியாண்டில், USAID உலகளவில் 44 பில்லியன் டொலர் செலவிட்டுள்ளது.
இந்த நிதி குறைப்புகளால், உலகின் ஏழ்மையான குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக எலோன் மஸ்க்கை கேட்ஸ் கடுமையாக விமர்சித்தார்.
எலான் மஸ்கின் இந்த நிதிக்குறைப்பிற்கு பின்னர், பில்கேட்ஸ் இதற்கான செலவை இரட்டிப்பாக்க உள்ளதாக அறிவித்துள்ளார். பில்கேட்ஸின் இந்த முடிவிற்கு, எலான் மஸ்க் காரணமாக உள்ளாரா என பலரும் விவாதித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |