ட்ரம்பால் பேரிடியை எதிர்கொண்ட பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய கார் ஜாம்பவான்கள்
ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் வரி விதிப்பால் பங்கு விலைகள் சரிவடைந்த நிலையில் ஐரோப்பிய கார் ஜாம்பவான்கள் பலரின் நிகர மதிப்பில் பல பில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடுமையான நெருக்கடி
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் கார்களுக்கு மொத்தமாக 25 சதவீத வரிகளை விதித்து கார் தொழிற்சாலைகள் மீது பேரிடியை இறக்கியுள்ளார் ஜனாதிபதி ட்ரம்ப்.
இந்த நகர்வு பிரித்தானியாவின் கார் தயாரிப்பாளர்களுக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 6.7 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான கார்களை அமெரிக்காவுக்கு பிரித்தானியா ஏற்றுமதி செய்து வருகிறது.
பிரித்தானியாவின் சொகுசு கார் வகைகளான Range Rovers, Bentleys, Aston Martin, Rolls-Royce, Lotus மற்றும் Minis உள்ளிட்டவை அமெரிக்க சாரதிகள் மத்தியில் மிக மிக பிரபலமாகும்.
இந்த நிலையில் பிரித்தானிய சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸ், இன்னும் சில வரி விலக்குகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கையின் மத்தியில் அமெரிக்காவுடன் தீவிர பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் நிறுவனங்களான
கடந்த ஆண்டில் Aston Martin மட்டும் அமெரிக்காவுக்கு 1,928 எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடியால் வோக்ஸ்ஹால் உரிமையாளரான ஸ்டெல்லாண்டிஸின் பங்குகள் 4.2 சதவீதம் சரிந்தன.
மட்டுமின்றி, ஜேர்மன் நிறுவனங்களான Porsche, Mercedes-Benz, BMW மற்றும் Volkswagen ஆகியவைகளின் பங்குகளும் சரிவை எதிர்கொண்டுள்ளன.
கார்கள் மீதான இந்த வரி விதிப்பு கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ள Andrew Griffith, கார் உற்பத்தித்துறை தற்போது அழுத்தத்தில் இருப்பதாகவும், பிரித்தானியாவில் வேலைவாய்ப்புகள் தற்போது உண்மையான ஆபத்தில் உள்ளன என்பது தெளிவாகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |