நடுவானில் நடந்த திகில் சம்பவம்! விமானத்தை சூழ்ந்த பறவை கூட்டம்.. பதறிப்போன விமானி செய்த காரியம்
இத்தாலியில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் மீது திடீரென பறவை கூட்டம் மோதிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இத்தாலியில் உள்ள Bologna விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு Ryanair ஜெட் விமானம் மீது பறவை கூட்டம் மோதியது. Ryanair விமானத்தில் 737- 800 பயணிகளுடன் லண்டனில் இருந்து புறப்பட்டுள்ளது.
அப்போது ஹெரான் பறவைகள் மோதியதால் விமானத்தில் ரத்தக்கறை படிந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் விமானத்தின் பல பகுதிகளில் பறவைகளின் இறகுகள் சிக்கின.
சில பறவைகள் என்ஜினில் நுழைந்ததால் அப்பகுதியில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இதையடுத்து விமான இயந்திரம் கடுமையாக சேதம் அடைந்தது. விமானியின் புத்திசாலித்தனமான நடவடிக்கை காரணமாக விமான விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
விமானத்தின் இஞ்சினில் இருந்து தீப்பிழம்புகள் காற்றில் பறந்த சூழ்நிலையில் விமானி கவனமாக விமானத்தை தரையிறக்கியுள்ளார். அதனால் விமானத்தில் பயணித்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
— Breaking Aviation News & Videos (@aviationbrk) November 26, 2021
விமானி சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டதால் விமானிக்கு பல பாராட்டுகள் குவிந்து வருகின்றது. இந்நிலையில் விமானம் கொளுந்து விட்டு எரியும் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.