132 உயிர்களை பலி வாங்கிய கோர விபத்து.. கருப்பு பெட்டியால் தெரிய வந்த அதிர்ச்சி உண்மை!
சீனாவில் 132 உயிர்களை பலி கொண்ட விமான விபத்து திட்டமிட்டு செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி, சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்தில் விமான ஊழியர்கள், 2 பைலட் என மொத்தம் 132 பேருடன் பயணித்த போயிங் 737-800 ரக விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 28 ஆண்டுகளில் சீனாவில் ஏற்படாத மிகவும் மோசமான விமான விபத்து இது தான் என்று கூறப்படுகிறது.
Absolutely horrific footage out of China today from the Boeing 737-800 crash
— Chris Combs (@DrChrisCombs) March 21, 2022
According to @flightradar24 the last reported vertical speed was -31,000 ft/min. Commercial air flight is very safe & China has a strong recent record. This is really, really sad pic.twitter.com/WrjguW8YZ0
இந்த விபத்து தொடர்பாக சீனாவில் ஆய்வு மேற்கொள்ள, அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் போயிங் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சென்றனர். முதற்கட்டமாக, அவர்கள் நடத்திய ஆய்வில் விமானத்தில் எந்த பாதுகாப்பு குறைபாடும் இருப்பதாக கண்டறியப்படவில்லை. அதே போல் சேதமடைந்த கருப்புப் பெட்டியை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
Footage shows spot of second black box of China's crashed jet. #MU5735 pic.twitter.com/YaRVhzScQ4
— CGTN (@CGTNOfficial) March 27, 2022
இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்து கிடைத்த கருப்பு பெட்டியில் சேகரிக்கப்பட்டிருந்த தகவல்களில், விமானி அறையில் இருந்து யாரோ தான் வேண்டும் என்றே விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என புலனாய்வு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, விமானத்தில் இருந்த யாரும் விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் அருகில் பறந்துகொண்டிருந்த விமானங்களின் விமானிகளின் அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.
சைனா ஈஸ்டர்ன் விமான நிறுவனம் இது தொடர்பாக கூறுகையில், விமானி மற்றும் துணை விமானி இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தனர். அவர்களுக்கு நிதி அல்லது குடும்ப பிரச்சனைகள் எதுவும் இல்லை என தெரிவித்தது. அதேபோல், விமானத்தில் இருந்து அவசரகால குறியீடு எதுவும் அனுப்பப்படவில்லை. எனவே விமானி அறையின் பாதுகாப்பு மீறப்பட்டிருக்க வாய்ப்பில்லை என சீன அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே திட்டமிட்டு இந்த விபத்து நிகழ்த்தப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.