புதிய போப் தெரிவின் முதல் நாள்: வத்திக்கானில் எழுந்த கரும்புகை!
வத்திக்கானில் போப் தெரிவு நடைபெறும் கான்கிளேவின் முதல் நாளில் கரும்புகை எழுப்பப்பட்டது.
வத்திக்கானில் போப் தெரிவு நடைபெறும் கான்கிளேவின் முதல் நாளில் புதிய போப்பை தேர்ந்தெடுக்க முடியாததை இந்த கரும்புகை உறுதிப்படுத்தியுள்ளது.
சிஸ்டின் சபைமண்டபத்தில் 133 கார்டினல்கள் கூடியிருக்க, உள்ளூர் நேரப்படி மாலை 5:45-க்கு வாக்களிப்பு தொடங்கியது.
இரவு 9:05-க்கு புகை வெளியே வந்ததும், கீழே கூடியிருந்த 45,000 மக்கள் கைதட்டி பதிலளித்தனர்.
முன்னாள் போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 88 வயதில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, புதிய போப் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த முதல் நாளில் தெரிவு நடக்க வாய்ப்பில்லை என்றாலும், திருவிழா போன்ற முறையில் மக்கள் திரண்டனர்.
தொஸ்கானியைச் சேர்ந்த சின்ஸியா காபோராலி, தனது கணவருடன் ரோமுக்கு வந்து, போப் பிரான்சிஸ் சமாதியில் வழிபட்டதைக் கூறினார். 2005-ல், போப் பெனடிக்ட் 16 தேர்ந்தெடுக்கப்பட்ட தருணத்தை நினைவு கூறினார். “அப்போது வெண்நிற புகை வெளியே வந்ததும், மக்கள் ‘Fatto!’ எனக் கத்தினர்” என்றார்.
கார்டினல் ஜியோவன்னி பட்டிஸ்டா ரே தனது பிரார்த்தனையில், “அனைத்து தனிப்பட்ட எண்ணங்களையும் விலக்கி, புனித ஆவியின் வழிகாட்டுதலோடு உலகிற்கும் திருச்சபைக்கும் தேவையானவரை தேர்வு செய்யுங்கள்” என வலியுறுத்தினார்.
பிங்க் புகை
இந்நிலையில், பிரித்தானியாவைச் சேர்ந்த Catholic Women’s Ordination அமைப்பு, திருச்சபையில் பெண்களுக்கு இடமில்லை என்ற பிரச்னையை எதிர்த்துப் போராட்டம் நடத்த பிங்க் புகை (pink smoke) மூலம் எதிர்வினை தெரிவித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Vatican conclave 2025, Pope election update, Black smoke Vatican, Sistine Chapel voting, Cardinals conclave Rome, Pope Francis successor, Catholic women protest, Pink smoke Vatican, CWO protest Rome, Pope election delay