இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும் கருப்பு உளுந்து பொடி.., எப்படி செய்வது?
இந்த சுவையான கருப்பு உளுந்து பொடி இட்லி, தோசை என அனைத்திற்கு அருமையாக இருக்கும்.
அந்தவகையில், ஆரோக்கியத்தையும், சுவையையும் அள்ளிக் கொடுக்கும் கருப்பு உளுந்து பொடியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து- ¼kg
- பொட்டுக் கடலை- 2 ஸ்பூன்
- கடலைப் பருப்பு- 3 ஸ்பூன்
- சீரகம்- 3 ஸ்பூன்
- மிளகு- 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை- ஒரு கொத்து
- காய்ந்த மிளகாய்- 15
- பெருங்காயம்- ஒரு ஸ்பூன்
- உப்பு- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் கடாயில் கருப்பு உளுந்தம் பருப்பை மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்ததாக பொட்டுக் கடலை போட்டு சில நிமிடங்களுக்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் இதில் கடலைப் பருப்பு போட்டுநன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து கடாயில் சீரகம், மிளகு, கறிவேப்பிலை போட்டு நன்கு வறுத்துக்கொள்ளவும்.
பின் அடுப்பை அனைத்து அதன் சூட்டிலேயே காய்ந்த மிளகாய்களை போட்டு வறுக்கவும்.
இப்போது வறுத்த பொருட்களுடன் பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்தால் சுவையான கருப்பு உளுந்து பொடி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |