கொல்லப்பட்டால் 5 மில்லியன்: பணத்திற்காக இராணுவ வீரர்களை மணக்கும் பெண்கள்? அம்பலப்படுத்தும் குழு
ரஷ்ய இராணுவ வீரர்களை பணத்திற்காக பெண்கள் மணப்பதாக சமூக வலைத்தளத்தில் குழு ஒன்று பரப்பி வருகிறது.
சமூக சலுகைகள்
உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பின் அதிக ஊதியம் மற்றும் சமூக சலுகைகளை ரஷ்ய இராணுவ வீரர்கள் அனுபவிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிளாக்லிஸ்ட் SVO என்ற குழு VKonatakte என்ற சமூக தளத்தில், "காதலின் இருண்ட பக்கம். பணத்திற்காக மயக்குபவர்களை நாங்கள் விவாதிப்போம், கண்டிப்போம், இழிவுபடுத்துவோம்" என்ற விளக்கத்துடன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
இந்த குழுவானது, காதலுக்காக அல்லாமல் பணத்திற்காக இராணுவ வீரர்களை மணப்பதாக சந்தேகிக்கப்படும் பெண்களை அம்பலப்படுத்துவதாக கூறுகிறது.
கொல்லப்பட்டால் 5 மில்லியன் ரூபிள்
நிதி ஆதாயத்திற்காகவும், பணத்திற்காகவும் ஏமாற்றும் பெண்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.
அதாவது, ஒரு இராணுவ வீரரை மணந்திருக்கும்போது, ஒரு பெண் இரகசியமாக அவரது பெயரில் கடன் வாங்கலாம். அவரது காரை மோசடி செய்யலாம். மேலும், அவர் போரில் கொல்லப்பட்டால் 5 மில்லியன் ரூபிள் (சுமார் 63,111 டொலர்கள்) அரசாங்க இழப்பீடு பெறலாம்.
இதன் காரணமாக, பணத்திற்காக ஒரு இராணுவ வீரரை மனப்பதாக சந்தேகிக்கப்படும் பெண்கள், இணையத்தில் பரவலான அவதூறுகளுக்கு ஆளாக நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |