உலகக் கோப்பையிலே இந்த அணிய மட்டும் வீழ்த்திட்டா போதும்... ‘லைப் டைம் செட்டில்மெண்ட்’! பாகிஸ்தானுக்கு முதலீட்டாளர் ஓபன் சேலஞ்
எதிர்வரும் உலகக் கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்திவிட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ‘பிளாங்க் செக்’ தருவதாக பெரும் முதலீட்டாளர் தன்னிடம் கூறியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு (ஐபிசி) மீதான செனட் நிலைக்குழுவின் சந்திப்பில் பேசிய PCB தலைவர் ரமீஸ் ராஜா, கிரிக்கெட் பொருளாதார வளர்ச்சி நாட்டின் தற்போதைய தேவையாக உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐசிசி) வழங்கும் நிதியை நம்பியிருப்பதை விட விட தன்னிறைவு பெறுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
ஐசிசி-யிடமிருந்து பெறும் 50% நிதியில் PCB இயங்கிக்கொண்டிருக்கிறது, ஐசிசி-க்கான 90% நிதி இந்தியாவிடமிருந்து வருகிறது.
ஐசிசி-க்கு இந்தியா நிதியளிப்பதை நிறுத்தினால், PCB சரிந்துவிடக்கூடும் என்று நான் பயப்படுகிறேன். ஏனெனில் PCB ஐசிசி-க்கு 0% நிதியை தான் வழங்குகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட்டை வலுவாக மாற்றுவதில் உறுதியாக உள்ளேன் என ரமீஸ் ராஜா கூறினார்.
PCB-க்கு வலுவான நிதி ஆதரவு இருந்தால், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து அணிகள் வெளியேறாது.
நமது கிரிக்கெட் பொருளாதாரம் வலுவாக இருந்தால், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற அணிகளால் பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்பட்டிருக்கமாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.