ஆப்கான் மசூதியில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல்! ரத்த வெள்ளத்தில் உயிரற்று கிடக்கும் மக்கள்... நெஞ்சை பதபதைக்க வைக்கும் காட்சி
ஆப்கானிஸ்தானில் ஷியா மசூதியில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kunduz மாகாணத்தில் உள்ள சையத் அபாத் மசூதியிலே இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மசூதியில் நூற்றுக்கணக்கானோர் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
முதற்கட்ட தகவலின் படி, அந்நேரத்தில் மசூதிக்குள் இருந்த தற்கொலை தாக்குதல்தாரி வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கிட்டதட்ட 50 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும், 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக AFP தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள சிலரின் நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
Afganistan'ın Kunduz ilinde Cuma namazı sırasında bir Şii camisinde patlama meydana geldi. Çok sayıda ölü ve yaralı var!pic.twitter.com/RciibLtIyJ
— Emre Orman 🇵🇸 (@eemreorman) October 8, 2021
ஐ.எஸ்(கே) பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.