பிதற்றும் கொடூர கொலைகாரி! மகள்களை நிர்வாணமாக நரபலி கொடுத்த தம்பதி விவகாரம்... மனைவியின் செயலால் ஏற்பட்ட குழப்பம்
இந்தியாவில் பெற்ற மகள்களை நரபலி கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பதிகளில் மனைவி மனநோயாளி போல நடிப்பதால் பொலிசார் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த புருசோத்தம் நாயுடு - பத்மஜா நாயுடு தம்பதியர் தங்களது இரு மகள்களான அலெக்கியா, சாய் திவ்யா ஆகியோரை நிர்வாணமாக்கி நரபலி கொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
முன்னதாக விசாரணைக்கு கொலை நடந்த வீட்டுக்கு சென்ற காவல்துறை உயர் அதிகாரியை பார்த்து புருஷோத்தம் நாயுடுவின் மனைவி பத்மஜா, காலில் ஷூ அணிந்து கொண்டு தமது பூஜை அறைக்குள் வருகிறார்கள், தடுத்து நிறுத்துங்கள் என்று சுய நினைவுடன் எதிர்த்தார்.
விசாரணைக்கு பின்னர் முதல் குற்றவாளியாக தந்தை புருஷோத்தம் நாயுடுவையும் இரண்டாம் குற்றவாளியாக தாய் பத்மஜாவையும் கொலை வழக்கில் செய்த பொலிசார், இந்த வழக்கு தொடர்பாக 30க்கும் மேற்பட்டோரை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெற்ற மகள்களை நரபலியிட்ட கொடூர கொலைகாரியாக காவல்துறையினரால் சுட்டிக்காட்டப்படும் பத்மஜா மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பிதற்றியுள்ளார்.
கொரோனா சோதனையின் போது தன்னை சிவனின் மறு அவதாரம் என்றும் மார்ச் மாதத்திற்கு பின்னர் கொரோனாவுக்கு மருந்தே தேவைப்படாது என்றும் கூறி அதிரவைத்தார்.
தெளிவாக இருந்த பத்மஜா உண்மையிலேயே மனநிலை பாதிப்பு ஏற்பட்டு விட்டதா அல்லது நடிக்கிறாரா என பொலிசாருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையில் அலெக்கியா, சாய் திவ்யா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று பொலிசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
