படகு கவிழ்ந்து பெரும் விபத்து... சிறார்கள் உட்பட மூழ்கி பலியான 40 பேர்கள்
இத்தாலியின் லம்பேடுசா தீவில் படகு ஒன்று கடலில் மூழ்கியதில் குறைந்தது 41 பேர் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Sfax துறைமுகத்தில் இருந்து
குறித்த விபத்தில் சிக்கியவர்களில் நால்வர் மால்டா சரக்கு கப்பல் ஒன்றால் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இத்தாலிய கடலோரப படையிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய அவர்கள் துனிசியாவில் உள்ள Sfax துறைமுகத்தில் இருந்து படகில் புறப்பட்டதாகவும், இத்தாலியின் கரைக்கு நெருங்கும் வழியில் மூழ்கியதாக தெரிவித்துள்ளனர்.
@twitter
மேலும், தங்கள் படகில் மூன்று சிறார்கள் உட்பட மொத்தம் 45 பேர்கள் பயணித்ததாகவும், ஆனால் கடலில் பயணிக்கத்தொடங்கியதும், படகில் தண்ணீர் புகுந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அனைத்து பயணிகளும், சஹாரா ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. மீட்கப்பட்ட நால்வர் கூறிய தகவலின் அடிப்படையில், சிறார்கள் உட்பட 41 பேர்கள் கடலில் மூழ்கி இறந்துள்ளதாகவே தெரியவந்துள்ளது.
ஞாயிறன்று புலம்பெயர் மக்களின் இரு படகுகள் லம்பேடுசா தீவு அருகே விபத்தில் சிக்கியதில், பெண் ஒருவர் மற்றும் பிஞ்சு குழந்தை ஒன்றின் சடலமும் மீட்கப்பட்டது. அத்துடன், 57 பேர்கள் உயிருடன் மீட்கப்பட்ட, 30 பேர்கள் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
வட ஆப்பிரிக்காவில் இருந்து 78,000 பேர்கள்
முதல் படகில் 48 பேர் இருந்தனர், அவர்களில் 43 பேர் மீட்கப்பட்டனர். இரண்டாவது படகில் 42 பேர்கள் இருந்துள்ளனர். அதில் 14 பேர்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆண்டு தொடக்கத்தில் இருந்தே வட ஆப்பிரிக்காவில் இருந்து 78,000 பேர்கள் இத்தாலியில் நுழைந்துள்ளதாக உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
@AP
இதில், துனிசியாவில் இருந்து மட்டும் 42,719 பேர்கள் என கூறப்படுகிறது. சமீபத்தில் லிபியாவின் எல்லையில் அமைந்துள்ள பயன்பாட்டில் இல்லாத பகுதிக்கு சஹாரா ஆப்பிரிக்க புலம்பெயர் மக்களை துனிசியா வெளியேற்றி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இதில் பலர் குடிநீர், உணவு அல்லது உறைவிடம் இல்லாமல், கடுமையான வெப்பம் காரணமாக மரணமடைந்ததாகவும், பலர் லிபியா எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |