பாலத்தில் தொங்கவிடப்பட்ட மனித சடலங்கள்! மெக்ஸிக்கோவில் நடக்கும் பயங்கரம் (WARNING Video)

Police Mexico DeadBodies
By Kaviarasan Nov 19, 2021 09:40 PM GMT
Report

மெக்ஸிக்கோவில் பாலத்தில் சுமார் 9 மனித சடலங்கள் கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ஸிக்கோவில் உள்ள Zacatecas மாநிலத்தில் இருக்கும் பாலம் ஒன்றில், கடந்த வியாழக்கிழமை காலை சுமார் ஒன்பது மனித உடல்கள் கயிற்றால் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அந்த 9 உடல்களை கைப்பற்றியும், அருகில் இருந்த ஒரு சடலம் என மொத்தம் 10 சடலங்களை மீட்டு, பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


குற்றப்பிரிவுகளுக்கு இடையே நடந்து வரும் சண்டைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று Zacatecas மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாலத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலங்களில் சிலர்Cuauhtémoc-ன் Zacatecas-ல் வசிப்பவர்கள் என்று நம்பப்படுகிறது.

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் சில சமயங்களில் தங்கள் எதிரிகளுடன் மோதிக்கொள்ளும்போது உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் இக்கொலைகள் அப்பகுதியில் செயல்படும் கிரிமினல் கும்பல்களுக்கு இடையிலான தகராறுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பாலத்தில் தொங்கவிடப்பட்ட மனித சடலங்கள்! மெக்ஸிக்கோவில் நடக்கும் பயங்கரம் (WARNING Video) | Bodies Hanging Bridge Mexico Gang Violence Video

எனவே, இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை பிற்பகல் வரை இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து அந்த நகரில் வசித்து வரும் குடியிருப்பாளர் கூறுகையில், எங்களுக்கு இது பயமாக இருக்கிறது. இரவில் தனியாக வெளியே செல்ல மிகவும் பயமாக உள்ளது. சீக்கிரமே தூங்கிவிட வேண்டும். இரவு நேரங்களில் அதிக சத்தம், அலறல் போன் விஷயங்கள் நடந்து வருவதாகவும் கூறினார்.

பாலத்தில் தொங்கவிடப்பட்ட மனித சடலங்கள்! மெக்ஸிக்கோவில் நடக்கும் பயங்கரம் (WARNING Video) | Bodies Hanging Bridge Mexico Gang Violence Video

Cuauhtémoc-வில் இருந்து சுமார் 68 மைல் தொலைவில் உள்ள Fresnillo நகரில் உள்ள ஒரு பாலத்தில் மூன்று உடல்கள் தொங்கிக் கொண்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்த நிலையில், அடுத்து வியாழக்கிழமை இப்படி மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

போதைப் பொருள் விற்பனை விவகாரத்தில், இது போன்ற கொடூர மரணங்கள் மெக்ஸிக்கோவில் சமீபகாலங்களாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US