லண்டனில் காணாமல் போன இளைஞனை தேடும் போது கண்டெடுக்கப்பட்ட சடலம்! வெளியான பின்னணி தகவல்கள்
லண்டனில் காணாமல் போன இளைஞரை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்ட நிலையில் தேம்ஸ் நதியில் இருந்து ஒரு சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
Wandsworth-ஐ சேர்ந்த 27 வயதான இளைஞர் முசா முகமது சமீபத்தில் காணாமல் போனார்.
அவர் லீ பெஸ் இரவு விடுதியில் இருந்து வெளியில் வந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் கடைசியாக காணப்பட்டார் என பொலிசார் தெரிவித்தனர்.
அவரை தேடும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டனர். இந்த நிலையில் முசாவை தேடும் போது தேம்ஸ் நதியில் இருந்து ஒரு சடலத்தை அவர்கள் கண்டெடுத்துள்ளனர்.
அந்த சடலம் குறித்து இன்னும் முறையான அடையாளம் காணப்படவில்லை என கூறிய பொலிசார் முசாவின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இந்த மரணம் விவரிக்கப்படாதது எனவும் இது தொடர்பாக விசாரணைகள் நடந்து வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.