பேஸ்புக் காதலன் வீட்டிற்கு சென்ற இளம்பெண்! பிரிட்ஜை திறந்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி
தென்னாப்பிரிக்காவில் பெண்ணின் சடலம் வீட்டு பிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞனின் மனநிலையை பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இளம்பெண்ணொருவர் Flavio Hlabangwane என்ற இளைஞருடன் பேஸ்புக்கில் நட்பானார். பின்னர் இருவரும் தங்களது முதல் டேட்டிங் சென்ற நிலையில், அப்பெண், Flavio வீட்டில் கடந்த வாரம் இரவு தங்கினார்.
அப்போது தனக்கு பசி எடுப்பதாக அவர் கூற, Flavio வெளியில் கடைக்கு சென்றார். அந்த சமயத்தில் வீட்டில் இருந்த பிரிட்ஜில் சாப்பிட எதாவது இருக்குமா என பார்க்க அப்பெண் அதை திறந்த போது பேரதிர்ச்சி காத்திருந்தது.
அதன் உள்ளே மனித உடலின் பாகங்கள் இருந்தது. இதை பார்த்த அவர் கத்தி கூச்சலிட்டார், பின்னர் அருகில் இருந்தவர்கள் அங்கு வந்தனர். தகவல் அறிந்து வந்த பொலிசார் உடல் பாகங்களை கைப்பற்றியதோடு Flavioவையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞன் மனநலத்தில் பிரச்சினை இருக்கலாம் என நீதிமன்றம் கருதுகிறது.
ஏனெனில் அவர் இருமுறை தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. அதன்படி Flavioக்கு மருத்துவமனை பரிசோதனை மேற்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பிரிட்ஜில் கிடந்த பெண்ணின் சடலம் யாருடையது என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.